1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.
பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.
பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு.
இவரின் இரண்டு மகள்களும் அம்மாவை போல அச்சு அசல் இருப்பார்கள்,இவர்களுடன் குஷ்பு எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.
தற்போது சுந்தர் சியை காதலிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையெல்லாம் வெளியிட்டுள்ளார் குஷ்பு.மேலும் மகள்களுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in