கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்

கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார் 1

விளம்பரம்

மேலும், அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ரசிகர்கள் சூழ்ந்து வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு சோனு சூட் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெங்களுரூவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படி

கன்னட சினிமா உலகின் உச்சபட்ச ஸ்டார்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், அப்பு என்று செல்ல பெயர்களில் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் பல ஹிட் படங்களில் நடித்தவர். இன்று காலை ஜிம்மில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போது இவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment