குக் வித் கோமாளி இறுதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணத்தினை கூறிய VJ ரக்ஷன்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர் ரக்ஷன். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்துகொண்டு வரவேற்பினை பெற்றார் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கி கோமாளிகளுடன் இவர் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை.எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அந்த நிகழ்ச்சியை கலகலகலப்பாக மாற்றி விடுவார்.இதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே.இதுவரை சின்னத்திரையில் இருந்த ரக்ஷன் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து நடித்து வருகிறார்

குக் வித் கோமாளி இறுதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணத்தினை கூறிய VJ ரக்ஷன் 1

விளம்பரம்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தில் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.ஆரம்பத்தில் கடுமையாக போராட்டங்களை கண்ட ரக்ஷன் தற்போது சினிமாவில் படிப்படியாக சாதித்து வருகிறார்.மேலும் தற்போது கதாநாயகனாகவும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

குக் வித் கோமாளி இறுதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய காரணத்தினை கூறிய VJ ரக்ஷன் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் பாதிலேயே ரக்ஷன் வெளியேறினார்.இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.தற்போது அவரே அதற்கான காரணத்தினை கூறியுள்ளார்.இறுதி போட்டியின் பொழுது அவருக்கு கடுமையாக காய்ச்சல் இருந்ததாகவும்,அவரால் முடியவில்லை என்பதால் குக் வித் கோமாளி இறுதி நிகழ்ச்சியின் பாதிலேயே சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment