நிரூப் கூறிய வார்த்தையால் கண்கலங்கிய பிரியங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை சேர்த்துள்ளார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தான் தொகுத்து வந்தார், யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிரூப் கூறிய வார்த்தையால் கண்கலங்கிய பிரியங்கா 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்தார்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கட்டாயம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தினார் பிரியங்கா.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.இவரின் இந்த வீடியோவை காண்பதற்கே பல லட்சம் மக்கள் உள்ளனர்.தொகுப்பாளர் துறையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவர் முன்னோடியாக உள்ளார்

நிரூப் கூறிய வார்த்தையால் கண்கலங்கிய பிரியங்கா 2

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் நடுவே பிரியங்கா தொகுப்பாளினியாக 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் அவரது நெருங்கிய நண்பர்களான மாகாபா ஆனந்த் மற்றும் நிரூப் ஆகியோர் சர்ப்ரைஸ் ஆக நிகழ்ச்சிக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.நிகழ்ச்சியில் பேசிய நிருப் பிரியங்கா நான் என்ற எந்த அகங்காரமும் இல்லாதவர்,எந்த பந்தாவும் இல்லாமல் தன்னடக்கமானவர் இருக்கும் இடத்தினை பாஸிட்டிவ் ஆக்குபவர் அவர் என் வாழ்க்கையில் வந்தது மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.இதனால் பிரியங்கா கண் கலக்கியுள்ளார்

https://www.youtube.com/watch?v=kH2QKbVo92I&ab_channel=VijayTelevision

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment