தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கஞ்சா கருப்பு.இவர் முதல் முறையாக சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார்.தனது பேச்சு மற்றும் உடல் பாவனைகளில் பலரையும் கவர்ந்து முன்னணி நகைச்சுவை நடிககைராக உருவெடுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கஞ்சா கருப்பு.மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அங்கும் பட்டையை கிளப்பினார்.தற்போது படவாய்ப்புகள் கஞ்சா கருப்புக்கு சரிவர அமைவதில்லை என்பதால் கிடைக்கும் படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கருப்பை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்க்காமல் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கஞ்சா கருப்பு கலந்துகொண்டு பேசியுள்ளார்.அப்பொழுது பேசிய அவர்,கதாநாயகி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு 1 லட்சம் கேட்கிறார்,வந்தால் அவருக்கு தானே நல்லது பெயர் கிடைக்கும் இப்படி இருக்கிறாரே என அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி மேடையில் பேசியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in