இனியாவுக்கு லெட்டர் எழுதிய பாக்கியா…அம்மாவை தேடி கதறி அழுத இனியா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இனியாவுக்கு லெட்டர் எழுதிய பாக்கியா...அம்மாவை தேடி கதறி அழுத இனியா... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இனியாவுக்கு லெட்டர் எழுதிய பாக்கியா...அம்மாவை தேடி கதறி அழுத இனியா... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாக்கியா, இனியா படிப்பில் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்துள்ளதை அறிந்துகொண்டு அவருக்கு லெட்டர் எழுதியுள்ளார்,மேலும் இனியா ஒழுங்காக படிக்க வேண்டும் என கூறியுள்ளார்.இந்த லெட்டரை படித்த இனியா அம்மாவை தேடி கதறி அழுதுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நீங்க தானே அம்மாவை விட்டு பிரிஞ்சி வந்தீங்க,அப்பறம் எதுக்கு அழுக்குறீங்க என கேள்வி கேட்டு ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Baakiyalakshmi | 29th to 31st December 2022 - Promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment