நான் போய்ட்டு வரேன் கண்ணம்மா.. குழந்தைகளை பார்த்துக்கோ.. கண்ணம்மாவை விட்டு பிரியும் பாரதி… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் போய்ட்டு வரேன் கண்ணம்மா.. குழந்தைகளை பார்த்துக்கோ.. கண்ணம்மாவை விட்டு பிரியும் பாரதி... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி கண்ணம்மாவின் சொந்த ஊருக்கே வருகிறார். சொந்த ஊருக்கு வந்து தனது மனைவியை அழைத்து செல்ல பல வழிகளை மேற்கொண்டும் இறுதியாக கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.

நான் போய்ட்டு வரேன் கண்ணம்மா.. குழந்தைகளை பார்த்துக்கோ.. கண்ணம்மாவை விட்டு பிரியும் பாரதி... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

கண்ணம்மாவுக்காக சண்டைக்கு சென்ற பாரதி அடிபட்டு சுயநினைவை இழந்து பழசயெல்லாம் மறந்துவிடுகிறார்.கண்ணம்மாவின் தீவிர முயற்சியால் பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியுள்ளது.தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் பாரதி கண்ணம்மாவிடம் வந்து தான் திரும்ப ஊருக்கு போவதாகவும்,குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும் கூறுகிறார்.மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறி மகள்களை கட்டியணைத்து அழுகிறார்.இந்த வீடியோ ரசிகர்களின் நெஞ்சை உறுக்கியுள்ளது

https://www.youtube.com/watch?v=nZ8-jw14maU

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment