நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன்.. நொந்துபோய் கிளம்பிய நீயா நானா கோபிநாத்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு.பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்..இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.அந்தளவிற்கு தனது சிறப்பான விவாதத்தினால் அசத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன்.. நொந்துபோய் கிளம்பிய நீயா நானா கோபிநாத் 1

விளம்பரம்

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு தலைப்பினை எடுத்து அதனை விவாதம் செய்து வருவார்கள்.இந்த நிகழ்ச்சி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும்,நடுநிலையாக பேசி வரும் கோபிநாத் தான் ஆகும்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின்பும் அம்மா பேச்சை கேட்கும் ஆண்களும் அவர்களின் மனைவிகளும் என்ற தலைப்பில் இவர்களுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன்.. நொந்துபோய் கிளம்பிய நீயா நானா கோபிநாத் 2

விளம்பரம்

இதில் கோபி பெண்களிடம்,நீங்கள் உங்கள் கணவரை நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது அணிந்து வந்த ஆடை பிடிக்கவில்லை என்றால் ஆடையை மாற்ற சொல்கிறீர்கள்,அதுபோல உங்கள் மாமியார் உங்கள் உடையை மாற்ற சொன்னால் மட்டும் ஏன் முடியாது என கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் அவர்கள் அம்மா பாசத்தில் கூறுகிறார்கள் என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்ததால் கோபிநாத்தே கடுப்பாகி என்னால முடியாது நான் விலகிக்கிறேன் நிகழ்ச்சியை விட்டு என நகைச்சுவையாக கூறியுள்ளார்

https://www.youtube.com/watch?v=f23Umpl5EdY

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment