தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.
மேலும் இனியா தந்தையுடன் இருந்து வருகிறார்.மேலும் டியூஷனில் ஆண் தோழர் உடன் நெருங்கி பழகி வருகிறார் இனியா.அவருடன் ஐஸ்கிரீம் கடையில் அமர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை பார்த்த ராதிகா இனியாவை கண்டித்துள்ளார்.இதனால் இனியா பயங்கர கடுப்பாகியுள்ளார்.மேலும் ரொம்ப ஓவரா பேசுறீங்க.. ரொம்ப சீன் போடுறீங்க நீங்க யாரு என்ன கேள்வி கேட்க ராதிகாவை கிழித்துள்ளார்.இதனால் ராதிகா செம்ம கடுப்பாகியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=MC6lGt3LZKo
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in