திரையரங்கில் தமிழ் மக்கள் அளித்த ஆதரவினை கண்டு மணிரத்தினத்தை கட்டியணைத்து கலங்கிய ஐஸ்வர்யா ராய்…

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

திரையரங்கில் தமிழ் மக்கள் அளித்த ஆதரவினை கண்டு மணிரத்தினத்தை கட்டியணைத்து கலங்கிய ஐஸ்வர்யா ராய்... 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

திரையரங்கில் தமிழ் மக்கள் அளித்த ஆதரவினை கண்டு மணிரத்தினத்தை கட்டியணைத்து கலங்கிய ஐஸ்வர்யா ராய்... 2

விளம்பரம்

இப்படத்தினை படக்குழு சென்னையில் உள்ள திரையரங்கிற்கு சென்று கண்டுள்ளது.அங்கு படம் முடிந்து வெளியே வந்த உடனே மக்கள் நந்தினி கதாபாத்திரத்திற்கு அளித்த ஆதரவை கண்டு ஐஸ்வர்யா ராய் நெகிழ்ந்து மணிரத்தினத்தினை கட்டியணைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் 200 கோடி வசூலை எட்டியுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment