இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் சோகம்…பாவம்ங்க அனிருத்

நடிகர் அனிருத் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்.தற்போது ஹிந்தியிலும் இசைக்க தொடங்கி விட்டார்.இவரது இசைக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ரசிகர்களை கவரும் வித்தையை கைவசம் அனிருத் வைத்துள்ளதால் அவரது பாடல்கள் மாபெரும் ஹிட் அடித்து வருகிறது.3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் கால் வைத்தவர்.முதல் படத்திலேயே இவர் இசையில் உருவாகிய ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது.பல மொழிகளிலும் அந்த பாடலை மொழிபெயர்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.அந்த அளவிற்கு முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் சோகம்...பாவம்ங்க அனிருத் 1

விளம்பரம்

தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைப்பாளர்.இவர் இசை இல்லாமல் தற்போது படங்கள் வெளியாவதே இல்லை அந்தளவிற்கு இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் அனிருத் என்று தான் கூற வேண்டும்.தற்போது அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் காலமாகியுள்ளார். இவரும் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனராக 80 மற்றும் 90களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் சோகம்...பாவம்ங்க அனிருத் 2

விளம்பரம்

1966 ஆம் ஆண்டு இயக்குனர் ஜெயஜென்தான் இயக்கத்தில் வெளியாகிய யாருக்காக அழுதான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார்.தற்போது வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை அவர் காலமானார்.இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment