விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போது புதிய ப்ரோமோவினை வெளியிட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் , கோபி உங்க குடும்பத்தை முதுகில் சுமந்தேன்,எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வெளியே வந்துருக்கேன்.போனா போகுதுனு ஒதுங்கி போறேன்.எப்போவும் இது மாதிரி அமைதியா போமாட்டேன்,எழில் என்கிட்ட தான் காசு வாங்கி படிச்சான்,அத திருப்பி கொடுக்க சொல்லுங்க என கூறியுள்ளார்.இதனால் கடுப்பாகிய தாத்தா பெத்த புள்ளையை படிக்கவச்சதையும் ,சாப்பிட்ட காசையும் திருப்பி கேட்க அசிங்கமா இல்லை உனக்கு என கோபியை திட்டி தீர்த்துள்ளார்
https://www.youtube.com/watch?v=uYbb7L31j0c
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in