The Indian Times

“அவரை தவிர எனக்கு வேற யாருமில்ல” செல் முருகனின் கண்கலங்க வைக்கும் ட்வீட்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

Advertisement

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட.

Advertisement

இந்த மாமனிதரின் இறப்பிற்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பர் , விவேக்குடன் பல படங்களில் இனைந்து நடித்த செல் முருகன் உருக்கமான ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

Check his Official Account Tweet Below அவரை தவிர வேறு யாரும் எனக்கு இல்லை என்று அனைவரையும் கண்கலங்கவைத்து விவேக் அவர்களுக்கு கவிதை ஒன்று ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in