“மகப அண்ணா தான் எங்களுக்கு எல்லாமே!!” – மணிமேகலை புகழாரம்! விவரம் உள்ளே!!

குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை அடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

"மகப அண்ணா தான் எங்களுக்கு எல்லாமே!!" - மணிமேகலை புகழாரம்! விவரம் உள்ளே!! 1

விளம்பரம்

ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் கேக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தன் கணவருடன் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கினார். இவர் செய்யும் குறும்புகளை மட்டுமில்லாமல் கொரோனா கால கட்டத்தில் இவரால் சென்னை வர முடியாத நிலையிலும் தான் தங்கியிருந்த ஊரில் வாழும் மக்களுடன் பேசி விளையாடி சமைத்து சண்டை போடு என அணைத்து தரப்பிலும் விடியோக்கள் வெளியாகி லைக் பறந்தது.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"மகப அண்ணா தான் எங்களுக்கு எல்லாமே!!" - மணிமேகலை புகழாரம்! விவரம் உள்ளே!! 2

விளம்பரம்

பின்பு கடந்த பொங்கலன்று தான் ஊரடங்கு காலத்தில் தங்கியிருந்த ஊர் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார். இதில் சிறப்பு என்ன வென்றால் பல ஆண்டுகள் கழித்து மணிமேகலையின் தாயார் மற்றும் தம்பி இவரை ஏற்றுக்கொண்டனர். இப்படி தொடர்ந்து சாதித்து வந்ததால் தனியார் யு ட்யூப் சேனல் நடத்திய விருது விழாவில் சிறந்த பொழுதுபோக்கு ஜோடி என விருது வழங்கியது. விருதுகளை பெற்று கொண்ட பின் பேச தொடங்கிய போது கடந்த நான்கு ஆண்டுகளாக மகாபா ஆனந்த் தான் தங்களை வழி நடத்தி செல்வதாகவும் அவரை போல ஒரு சிறந்த மனிதன் இல்லை எனவும் பெருமிதம் கொண்டனர். மேலும் எல்லா விதத்திலும் தனக்கு உதவிகளை மட்டுமே செய்து வரும் இவரது உறவு மேலும் வளர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் தந்து சோட்டிஸ்களுக்கு நன்றி பாராட்டினார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment