The Indian Times

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி

ஐ பி எல் தொடர் இது இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் தொடர். இந்த தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருடம் வருடம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோன காரணமாக ஐக்கிய அரபு நாடுகளில் சற்று காலம் தாழ்ந்து நடைபெற்றது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த ஆர்வம் சற்றும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஐ பி எல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. மேலும் இந்த ஐ பி எல் அனைத்து விதமான ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனென்றால் இந்த ஐ பி எல் இந்தியாவில் நடக்க உள்ளது. இதுவரை ஐ பி எல் தொடர் இல் மும்பை இந்தியன் அணி ஐந்து முறை கப் ஜெயித்து முதல் இடத்திலும், செ‌ன்னை அ‌ணி மூன்று முறை கப் ஜெயித்து இரண்டாம் இடத்திலும் உள்ளது.

சென்ற ஆண்டு சென்னை அணி பிளே ஆப் கூட செல்லாமல் வெளியேறியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து சென்னை அணி கேப்டன் தோனி ஒரு சாதனை படைத்த வண்ணம் உள்ளார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சென்னை அணி கேப்டன் என்ற முறையில் இதுவரை 150 கோடி சம்பாதித்து இருக்கிறார்.

இந்த சமபலம் வேறு எந்த வீரர்களுக்கும் வழங்கவில்லை என்று ஐ பி எல் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. சென்ற வருடம் 137 கோடி வரை சம்பாதித்த இவர் இந்த வருடம் சேர்த்து 150 வரை சம்பாதித்து இருக்கிறார். இவரை அடுத்து ரோகிட் ஷர்மா 147 கோடியில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in