எனக்கு என்ன பேசுறதுனே தெரில.. உணர்ச்சி வசப்பட பாண்டிராஜ் | Etharkkum Thunithavan

இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்தது வினய், சத்யராஜ், குக் வித் கோமாளி புகழ், சூரி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். கதாநாயகன், ஒரு சமூகப் போராளி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி எதிர்த்துப் போராடுவார் என்பதைச் சுற்றியே படம் நகர்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

Surya ET

விளம்பரம்

இப்படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இன்று மாஸ் ஆக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூர்யா மற்றும் பாமவிற்கு நடுவில் ஏற்கனவே ஜெய்பீம் பட சர்ச்சை நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கடலூர், கரூர், சேலம் ஆகிய பகுதிகளில் வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று பாமக நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் படம் இன்று வெளியாகியுள்ளது. Youtube Video Code Embed Credits: TamilGlitz

எனக்கு என்ன பேசுறதுனே தெரில.. உணர்ச்சி வசப்பட பாண்டிராஜ் | Etharkkum Thunithavan 1

விளம்பரம்

படத்தை பற்றி பொது மக்கள் கூறுகையில் படம் வேற லெவெலில் உள்ளதாகவும், மிக பெரிய வெற்றி அடையும் என்றும் கூறினர். இயக்குனர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது உணர்ச்சி பெருக்கில் என்னால பேச முடியல..ரொம்ப சந்தோஷமாக உள்ளது அனைவருக்கும் நன்றி என்று கூறினார். மேலும் கூல் சுரேஷ், புகழ், வினய் ஆகியோர் இந்த படத்தை பற்றி கூறியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment