The Indian Times

என்னயா பாத்துட்டு இருக்க..? – நடுவரிடம் பஞ்சாயத்து செய்த கோலி – வீடியோ

ஆஸ்ட்ரேலியா தொடரில் உச்சத்தில் இருந்த இந்திய அணி சென்னை சேப்பாக்கத்தில் தங்களின் முழு ஆற்றலை இழந்து விட்டது. இங்கிலாந்து உடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது இந்தியா. இதனால் தர வரிசை பட்டியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜாக் லெக் இருவரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் போனது.

420 ரன்கள் என்பது சற்று கடினமாக இருந்தாலும் அதற்கு ஈடாக நாம் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளித்து இருந்தனர். ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. இந்த தோல்வி பொதுவாக மைதானத்தை பொருத்து அமைந்து இருக்குமோ என்று ஒரு சிலர் வாதம் உள்ளது.

முதலில் புஜாரா ஆட்டம் இழந்ததை தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஸ்டிரைக்கில் இருந்தார். அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஒரு பெரிய கருவியாக செயல்பட்ட ஆண்டர்சன் இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒரு சவாலாக இருந்தார் அவருடைய பந்தை எதிர் கொள்ள அனைவருக்கும் உண்மையில் ஒரு சவாலாக தான் இருந்தது. இதையடுத்து ரஹானே அவரது பந்தில் ஆட்டமிழந்தார் பூஜ்ஜியம் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பண்ட் 11 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது அணியை நல்ல முற்போக்கு திசையில் கொண்டு சென்றது. அஷ்வின் மற்றும் விராட் சேர்ந்த கூட்டணி விராட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 24 வது அரை சதம் போட வைத்தது. இந்த தோல்வியை அடுத்து, மற்றொரு போட்டியில் இந்திய அணி தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டாவது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது

https://twitter.com/i/status/1358795280913559553

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in