The Indian Times

58 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் கோவை சரளா! காரணம் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் இன்று வரை பல நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அந்த காலத்தில் நகைச்சுவை நடிகை என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் ஆச்சி மனோரம்மா தான். அவரது இடத்தை அதன் பின்னர் யாராலும் நிரப்ப முடியாது என்று கூறிவந்த நிலையில், மனோரம்மாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் கோவை சரளா தான். கௌண்டமணி செந்திலோடு ஆரம்பித்து இன்று இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார் கோவை சரளா.

Advertisement

இன்று வரை இவரது இடத்தை யாராலுமே நிரப்பமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. நகைச்சுவைக்கு பேர்போன கோவை சரளா தற்போது அம்மா கேரக்டர்கள் மற்றும் முக்கியமான சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் கலக்கி வரும் கோவை சரளா 58 வருடங்களாக திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்தும் உள்ளார் கோவை சரளா. அதவாது இவங்களுக்கு 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே கோவைசரளா தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

Advertisement

அது மட்டுமில்லாது , அவர்களது பிள்ளைகளுக்கும் படிப்பு செலவு முதற்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டு வருகிறார் கோவை சரளா. என் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யவேண்டும் என்று மட்டும் தான் நினைத்தேன் , அதனால் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது எனக்கு பெரிய கவலையாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, மக்களை சிரிக்க வைத்த கோவை சரளா மனம் நெகிழ செய்துவிட்டார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in