சாலையோர வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பசியாற்றிய மைனா நந்தினி

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்தினி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.சின்னத்திரை நடிகராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சாலையோர வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பசியாற்றிய மைனா நந்தினி 1

விளம்பரம்

பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

சாலையோர வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பசியாற்றிய மைனா நந்தினி 2

விளம்பரம்

இந்நிலையில் இவரது யூடியூப் பக்கத்தில் சுமார் 10 லட்சம் பேர் இவரை பின்தொடருகின்றனர்.இதனை கொண்டாடும் விதமாக இவர் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மைனாவை அவரது ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment