மீண்டும் இந்திய அணிக்குள் தமிழ்நாட்டு சிங்கம் நடராஜன்! டி20 போட்டியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்ப்பு.

இந்திய இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5 போட்டிகளில் 2க்கு 2 என்ற கணக்குடன் இரண்டு அணிகளும் சமமாக உள்ளனர். தற்போது 5 வதாக நடக்கு இந்த போட்டியில் ஜெயிக்கும் அணியே தொடரை வென்ற அணியாக அறிவிக்க படும். அதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே அடுத்த போட்டியில் ஜெயித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். ஒரு போட்டியில் ஒரு தவறு செய்தால் மற்றொரு போட்டியில் அதை திருத்திக் கொண்டு வருகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

மீண்டும் இந்திய அணிக்குள் தமிழ்நாட்டு சிங்கம் நடராஜன்! டி20 போட்டியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்ப்பு. 1

விளம்பரம்

அப்படி தான், இஷான் கிஷன் சூர்யா குமார் யாதவ் , ரோஹித் சர்மா ஆகியோரை அணியில் சேர்த்து இந்திய அணிக்குள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அந்த மாற்றங்களும் வெற்றியை தேடி தந்துள்ளது. அதே போல அடுத்து வரும் ஆட்டத்தில் சில மாற்றங்களை கோலி கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெயித்து ஆகா வேண்டும் என்று இருக்கும் இந்த சமயத்தில் நடராஜன் அஹமதாபாத் சென்றுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீரீஸில் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது.

மீண்டும் இந்திய அணிக்குள் தமிழ்நாட்டு சிங்கம் நடராஜன்! டி20 போட்டியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்ப்பு. 2

விளம்பரம்

இதனால் இவரால் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் பங்கு பெற முடியவில்லை.தற்போது காயங்கள் அனைத்தும் குணமடைந்து விளையாட தயாராக இருக்கும் நடராஜன் அஹமதாபாத் சென்றுள்ளார். இந்நிலையில் இவர் அடுத்து நடக்க இருக்கும் 5 வது டி 20 போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெற்றுள்ள நடராஜன் தற்போது அஹமதாபாத் சென்றுள்ளார். இவர் டி 20 போட்டியில் கலந்து கொண்டாலும் இல்லை என்றாலும் ஒரு நாள் தொடரில் நிச்சயம் இடம் பெறுவார். நடராஜன் இந்த பொட்டியில் விளையாடினால் இந்திய அணிக்கு மிக பெரிய வலுவாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment