மாமன்னன் படத்தில் இருந்து வெளியாகியது நெஞ்சமே நெஞ்சமே பாடல்

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம்.தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் இவர்.ஆரம்பத்தில் ஜாதி ரீதியாக படம் எடுக்கிறார் என்று இவருக்கு எதிராக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டாலும் ஜாதியினால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே அவர் தனது படத்தில் உணர்த்தியிருப்பார்.இதனாலேயே இவரது இயக்கத்திற்கு இத்தகைய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஷூட்டிங் முடிந்து வந்து இன்று மகன்களுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

சினிமா மேல் ஆசை ஆனால் கற்று தர ஆள் இல்லை தேடி அலைந்த மாரி செல்வராஜுக்கு வந்தது அதிர்ஷடம் இயக்குனர் ராம் வடிவில்,மாரியின் ஆர்வத்தை பார்த்து அவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்,தனது எல்லா வித்தைகளையும் தனது சிஷியனுக்கு சொல்லி கொடுத்தார் ராம்.மாரி செல்வராஜ் கற்றது தமிழ், படத்தில் முதல் முறையாக உதவி இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் தங்க மீன்கள்,தரமணி போன்ற ராமின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் இயக்கத்தை கற்றுக்கொண்டு இவர் உருவாக்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

மாமன்னன் படத்தில் இருந்து வெளியாகியது நெஞ்சமே நெஞ்சமே பாடல் 1

இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இயக்கம் வாய்ப்பு கிடைத்தது.உடனே தனுஷை வைத்து கர்ணன் படத்தினை இயக்கினார்.இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.நேற்று இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி தற்போது இப்படத்தில் இடம்பெற்ற நெஞ்சமே நெஞ்சமே என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடலை விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீகோபாலன் பாடியுள்ளனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment