அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்.. எப்படி சரிசமமா தியேட்டர் கொடுக்கலாம்… வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி கமலுக்கு பின்பு அதிக ரசிகர்கள் கூட்டம் இருப்பது விஜய் மற்றும் அஜித்திற்கு தான்.அந்தளவுக்கு இருவரையும் அவர்களது ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.இவர்களின் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அதன்படி இருவரின் சினிமா வாழ்க்கையிலும் தோல்விகள் மற்றும் வெற்றிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய ஒன்று இன்று இணையத்தில் பெரும் பேசும்பொருளாக மாறி,பெருமளவு விமர்சனங்கள் தில் ராஜு மேல் கிளம்பியுள்ளது.

அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்.. எப்படி சரிசமமா தியேட்டர் கொடுக்கலாம்... வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு 1

விளம்பரம்

பேட்டியில் பேசிய தில் ராஜு,தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்.இரண்டு படங்களுக்கும் தமிழகத்தில் 400 ,400 திரையரங்குகள் சரிசமமாக ஒதுக்கப்பட்டுள்ளது.எப்படி இவ்வாறு சரிசமமாக கொடுக்கலாம் ,நான் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நேரிடையாக பேசி கூடுதல் திரையரங்குகளை கேட்க உள்ளதாக கூறியுள்ளார்.இது தற்போது பெரும் சர்ச்சையை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.தில் ராஜு பேச்சு அஜித் ரசிகர்களிடம் கடுமையான கண்டனத்தினை பெற்று வருகிறது.

அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர்.. எப்படி சரிசமமா தியேட்டர் கொடுக்கலாம்... வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு 2

விளம்பரம்

அஜித் ரசிகர்கள் தில் ராஜூவை இணையத்தில் வச்சி செய்து மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.இன்னும் ஒரு வாரத்திற்கு இவர் தான் கன்டென்ட் எனவும் கூறி பயங்கரரமாக கேலி செய்து வருகின்றனர். வாய் கொடுத்து தேவையில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜு சிக்கி கொண்டார் என்று தான் கூற வேண்டும்,இனி விமர்சனத்தில் இருந்து அவர் வெளியே வருவது கஷ்டம் தான்.மேலும் இதுகுறித்து அமைச்சரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment