தமிழக வீரருக்கு கொரோனா உறுதி! ஒத்திவைக்கப்பட்ட இன்றைய RCB vs KKR போட்டி.

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது.

தமிழக வீரருக்கு கொரோனா உறுதி! ஒத்திவைக்கப்பட்ட இன்றைய RCB vs KKR போட்டி. 1

விளம்பரம்

ஒவ்வொரு அணிக்கும் ஒரு சில முக்கியமான பிலயேர்கள் என்று இருக்கிறார்கள். அவர்களின் பெரும் பங்கு தான் அணியை வெற்றி பாதைக்கே அழைத்து செல்லும். இந்நிலையில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் இன்று நடக்க இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி ஒத்திவைக்கபட்டுள்ளது. கொல்கத்தா அணியை சேர்ந்த தமிழ் நாட்டு வீரர் வருண் சக்கரவத்தி மற்றும் சந்தீப் ஆகியோருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக வீரருக்கு கொரோனா உறுதி! ஒத்திவைக்கப்பட்ட இன்றைய RCB vs KKR போட்டி. 2

விளம்பரம்

கொல்கத்தா அணியின் முக்கியமான வீரர்களே இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இன்று நடக்க இருந்த கொல்கத்தா , பெங்களூர் போட்டி ஒத்திவைக்கபட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி அணியை சேர்ந்த அஸ்வின் மற்றும் பெங்களூரு அணியை சேர்ந்த ஆடம் சம்பா ஆகிய வீரர்கள் கொரோனா காரணமாக வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக வீரருக்கு கொரோனா உறுதி! ஒத்திவைக்கப்பட்ட இன்றைய RCB vs KKR போட்டி. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment