The Indian Times

பேசவிடாமல் கத்திய ரசிகர்கள்.. பாதியிலேயே மைக்கை கொடுத்துவிட்டு சென்ற சாய் பல்லவி

தமிழ் திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் சாய் பல்லவி. விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பின்னாளில் திரைப்படத்துறையில் கால் பதித்தார். பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ், மலையாள ரசிகர்களின் உங்களைக் கொள்ளைக் கொண்டார். பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் ஒரு மருத்துவரும் கூட. தமிழில் தனுஷ் – சாய்பல்லவி நடித்து வெளியான ரவுடி பேபி பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த பாடலுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்தனர். சாய் பல்லவி தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார். அந்த வகையில் அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

Advertisement

தற்போது தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார் சாய் பல்லவி. அப்போது மேடையில் நின்றுகொண்டிருந்த அவரை பேச அழைத்தனர். அவர் பெயரை சொன்னதுமே ரசிகர்கள் கத்த ஆரம்பித்துவிட்டனர். கரகோஷம், விசில் என அவரை பேச விடாமல் கத்திகொண்டே இருந்தனர். மேலும் ராஷ்மிகா பேசும் போது சாய் பல்லவி பெயரை குறிப்பிட மேலும் கத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் அரங்கமே அதிர்ந்து போனது.. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in