நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார் | சட்டமன்ற தேர்தல் 2021

2021 சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. நாட்டிற்காக ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் தருணம் இது தான். இதுவரை தமிழ் நாட்டில் பெரும்பான்மை ஆட்சியை பிடித்த காட்சிகள் என்றால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு காட்சிகள் மட்டும் தான். அது மட்டுமில்லாது கருணாநிதி அவர்கள் மற்றும் ஜெயலலிதா அவர்கள் இல்லாத முதல் தேர்தல் இதுவே. இம்முறை அதிமுக , திமுக , பாஜக , நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் , காங்கிரஸ் , அமமுக ஆகிய காட்சிகள் போட்டியிடுகின்றனர்.இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. காலை முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர்.Watch Video Below – Video Embeded Credits Bingo box Youtube Channel

விளம்பரம்

சூடுபிடித்துள்ள தேர்தல் களத்தில் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. வேலைக்கு செல்லக்கூடிய நபர்களும் காலையிலேயே வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு பதிவு செய்து வருகின்றனர். மக்கள் மட்டுமில்லாது அரசியல் பிரமுகர்களும் , நடிகர்களும் , முக்கிய பிரமுகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். வாக்கு பதிவு செய்து ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment