படங்களில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை போட்ட தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தது இயக்குனராக தான். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் தல அஜித் நடித்த வாலி திரைப்படம். இந்த படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து குஷி என்று மற்றுமொரு வெற்றி படத்தை கொடுத்தார். அதன் பிறகு நியூ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா சிறந்த நடிகர் என்றும் தமிழ் சினிமாவிற்கு எடுத்து காட்டினார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

படங்களில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை போட்ட தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இதை தொடர்ந்து அவர் வியாபாரி,இசை,ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இவர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் தற்போது வெளியாகி உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த இந்த படம் தற்போது பெரும் எரிதிர்பார்ப்புகளின் மத்தியில் வெளியானது. அனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. இருந்தாலும் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கூறும் விஷயம் என்ன வென்றால் எஸ்.ஜே.சூர்யாவுக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்று கூறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

படங்களில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை போட்ட தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் காரியரையே இழுத்து மூடும் விதமாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. எஸ்.ஜே.சூர்யா இனி எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த படம் இசை. இந்த படம் வெளியாகி இதனை ஆண்டுகள் ஆகிய பின்பும் ஞானவேல் ராஜாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எஸ்.ஜே.சூர்யா கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் சங்கம் எஸ்.ஜே.சூர்யா இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று தடை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது ரசிகர்ககளை மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment