பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்கள் படம்…சுஹாசினி பேச்சால் கிளம்பிய சர்ச்சை

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்கள் படம்...சுஹாசினி பேச்சால் கிளம்பிய சர்ச்சை 1

விளம்பரம்

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படத்தின் போஸ்டர்களை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.டீசரில் நடிகர் விக்ரம் நடிப்பில் அசத்தியிருக்கிறார் அதேபோல கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்கள் படம்...சுஹாசினி பேச்சால் கிளம்பிய சர்ச்சை 2

விளம்பரம்

இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.படக்குழு கேரளா ஹைதராபாத் டெல்லி போன்ற பகுதிகளுக்கு சென்று படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் மனைவி சுஹாசினி பேசிய பேச்சால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,இப்படம் தமிழ் கதை ஆனால் படப்பிடிப்பு நடைபெற்றது எல்லாம் ஹைதராபாத் தான்,தமிழ்நாட்டில் வெறும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்றது.என இது உங்கள் படம் என கூறியுள்ளார்.இதனால் நெட்டிசனைகள் சுஹாசினியை ட்ரோல் செய்து வருகின்றனர் மேலும் ரசிகர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமென்றாலும் கூறுவார்கள் போல என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

Actress Suhasini Super Speech At Ponniyin Selvan Pre Release Event | Vikram || WallPost

விளம்பரம்

Embed video credits : WALL POST

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment