மாமனிதன் படம் பார்த்து திரையரங்கு வாசலிலேயே கதறி அழுத தம்பி ராமைய்யா

இயக்குனராகவும்,நடிகராகவும் தமிழ் சினிமாவினை கலக்குபவர் தம்பி ராமைய்யா.தனது சிறந்த நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சரியாக உள்வாங்கிக்கொண்டு கட்சிதமாக நடிப்பவர்,இதனால் தான் இன்னும் சினிமாவில் கம்பீரமாக கோலூன்றி நிற்கிறார்.நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி,நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதனை இயக்குனர் எப்படி எதிர்பார்கிறாரோ அதேபோலவே நடித்து கொடுப்பவர்.இதனால் தற்போது இவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்.எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியினால் மட்டுமே இந்த அளவுக்கு உயர்ந்துள்ளவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சொந்த பணத்தில் மூதாட்டிக்கு தள்ளுவண்டி வழங்கிய KPY BALA

மாமனிதன் படம் பார்த்து திரையரங்கு வாசலிலேயே கதறி அழுத தம்பி ராமைய்யா 1

விளம்பரம்

இவர் மலபார் போலீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.பின்னர் நடிகர் முரளியை வைத்து மனு நீதி படத்தினை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.பல நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அண்மையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வினோதய சித்தம் படத்தில் நடித்து பட்டையை கிளப்பினார்.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.அஜித் விஜய் என பல முன்னனி நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார் தம்பி ராமய்யா. அண்மையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த மாமனிதன் படத்தினை பார்த்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம்

மாமனிதன் படம் பார்த்து திரையரங்கு வாசலிலேயே கதறி அழுத தம்பி ராமைய்யா 2

விளம்பரம்

இப்படத்தினை பார்த்து வெளியே வந்து கதறி அழுதுள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,முதலில் என்னை இயக்குனர் சீனு மன்னிக்கணும்,படத்தினை திரையரங்கில் என்னால் பார்க்க இயலாமல் போய்விட்டது.தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.உண்மையிலேயே தம்பி சீனு ராமசாமி தான் மாமனிதன்.சீனுவால் உயர்த்தப்பட்ட விஜய் சேதுபதியை காதலித்து காதலித்து அவரை ஒவ்வொரு ஒவ்வொரு கட்டத்திலும் மேலும் மேலும் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார் சீனு.எங்க அப்பாவை நியாபகப்படுத்திவிட்டார் சண்டாளன் விஜய் சேதுபதி.இந்த படத்தில் உயிரை உலுக்கும் வசனம் இடம் பெற்றுள்ளது,தந்தை தோற்ற இடத்தில் மகன் ஜெயிக்கிறான் என்ற வசனம் என் உயிரை உலுக்கி விட்டது.தம்பி சின்னவர் இல்லையென்றால் காலில் விழுந்திருப்பேன் என நெகிழ்ச்சியாகி கண்ணீர் விட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கிளாமரில் அசத்தும் சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Nakkheeran Studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment