20 வயது கணவரின் கதையை முடித்த 33 வயது மனைவி.. திருநெல்வேலியில் நடந்த கொடூரம் | Viral Video

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அபிராமியின் முதல் கணவர் உடல்நலக்குறைவால் காலமானதாக கூறப்படுகிறது. இதனால் தனியாக வாழ்ந்து வந்த அபிராமி அச்சன்புதூரை சேர்ந்த 20 வயது இளைஞர் காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 2017ம் ஆண்டு தன்னைவிட 13 வயது சிறியவரான காளிராஜை இரண்டாவது திருமணம் முடித்துள்ளார் அபிராமி. 2018 செப்டம்பர் முதல் காளிராஜை காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காளிராஜின் தாயார் அபிராமியிடம் சென்று எங்கே என் மகன் என கேட்டுள்ளார். அதற்கு அபிராமி எந்த விதமான பதிலையும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

20 வயது கணவரின் கதையை முடித்த 33 வயது மனைவி.. திருநெல்வேலியில் நடந்த கொடூரம் | Viral Video 1

விளம்பரம்

மகனை இரண்டரை வருடங்களாக காணமல் இருந்த தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் அபிராமியிடம் விசாரணை செய்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அபிராமி, இறுதியில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவர் காளிராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 13 வயது வித்தியாசம் இருந்தபோதிலும் பெயருக்காகவே திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் தமக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததை காளிராஜ் கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரை கொலை செய்து விட்டதாகவும் அவர் கூறினார். YouTube video code embed credits: Polimer News

20 வயது கணவரின் கதையை முடித்த 33 வயது மனைவி.. திருநெல்வேலியில் நடந்த கொடூரம் | Viral Video 2

விளம்பரம்

மெக்கானிக் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தை ஊர் முழுவதும் சொல்லிவிடுவதாக மிரட்டியுள்ளார் காளிராஜ். இதனால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்தன. தகாத உறவினால் ஒரு இளைஞன் உயிர்பறிபோனதுதான் மிச்சம். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the Below Video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment