25 வயது பெண்ணை மணந்த 50 வயது தாத்தா..5 மாதங்களில் உயிரை மாய்த்த சோகம் | Sangarappa

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்ட 45 வயது நபருக்கு நடந்த சோகம், திருமணமான ஐந்தே மாதங்களில் தூக்கிக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த விவசாயி சங்கரப்பா. இவருக்கு வயது 45. தலையில் முடி இல்லாத காரணத்தால் 60 வயது போல் காட்சியளிக்கும் சங்கரப்பாவிற்கு மேகனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. மேகனா கணவனால் கைவிடப்பட்ட 25 வயது இளம் பெண். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு வாழ்க்கை தரும் எண்ணத்தில் சங்கரப்பா மேகனாவை திருமணம் செய்ய முடிவெடுத்து இவர்கள் இருவருக்கும் பெங்களூருவில் உள்ள்ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.

25 வயது பெண்ணை மணந்த 50 வயது தாத்தா..5 மாதங்களில் உயிரை மாய்த்த சோகம் | Sangarappa 1

விளம்பரம்

கடந்த அக்டோபர் 19ல் நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் சங்கரப்பா மிகவும் பிரபலமடைந்தார். 90’ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் 45 வயது நபருக்கு திருமணம் ஆகிவிட்டதே என்று பலர் இவரை வசைபாடவும் செய்தனர். திருமணம் முடிந்த பின்னர் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, வீடியோக்களை அப்லோட் செய்வது என்று சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக சங்கரப்பாவின் வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளார். மாமியார் மருமகள் சண்டையால் மனம் நொந்து போயுள்ளார். இதனால் அருகில் இருந்த தோப்புக்கு அதிகாலை சென்ற சங்கரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods Air

25 வயது பெண்ணை மணந்த 50 வயது தாத்தா..5 மாதங்களில் உயிரை மாய்த்த சோகம் | Sangarappa 2

விளம்பரம்

இதுகுறித்து அவர் மனைவி மேகனா கூறுகையில் நானும் எனது கணவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மாமியார் அடிக்கடி எங்களிடம் சண்டையிட்டு வந்தார். இப்படி சண்டை போட்டுக்கொண்டிருந்தால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று கணவர் அவரது தாயாரிடம் கூற, அவர் “செத்துப் போடா” எனக்கூறினார். அதனால் என் கணவர் மனமுடைந்து இறந்துவிட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கும் பொழுது நாய் வளர்ப்பதில் மாமியார்-மருமகள் இடையே ஏற்ப்பட்ட சண்டை காரணமாக, தாயை ஆதரித்து பேசிய சங்கரப்பாவை மேகனா கடுமையாக திட்டியுள்ளார் அதனாலேயே மனமுடைந்து சங்கரப்பா தூக்கில் தொங்கிவிட்டார் என்று கூறியுள்ளனர். மேகனா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். மாமியார் மருமகள் சண்டையில் மனம் நொந்த சங்கரப்பா தனது உயிரை மாய்த்துள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment