பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை!
அப்படி இருக்கையில் பஞ்சபூதங்களையும் அதன் ஆற்றல்களையும் அடிப்படையாக கொண்டு 10 வாரங்களுக்கு இயங்கும் என அறிவித்த நிலையில் நாணயத்தை கைப்பற்ற சிலர் தங்களது நியாயத்தை மறந்து நடந்ததும் மற்றும் இன்னும் ஒரு சிலர் நம்பிக்கையாக பேசி ஏமாற்றியதும் நாம் அறிந்ததே! கடந்த வார இறுதியிலேயே நிரூப்புக்கும் அக்ஷராவுக்கும் வாக்குவாதம் பற்ற தொடங்கிய நிலையில் நேற்று நிலத்தின் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை நிரூப் தன்வசம் வைத்துள்ளதால் அவரது ஆளுமையால் இந்த வீடு இயங்கும் என்று அறிவித்த நிலையில் நிரூப் சில விதிகளை போட்டு தனக்கு உதவியாளராக அக்ஷராவை நியமிக்க அவரோ அதை மறுக்க மேலும் சூடு பிடிக்க தொடங்கியது!
அது மட்டுமில்லாமல் விதிமுறையை மீறுவதாக இமான் அண்ணாச்சியின் மீது பிரியங்கா உட்பட சக போட்டியாளர்கள் விளையாட்டு தனமாக போர்க்கொடி தூக்க, அது இறுதியில் சிறிது மனக்கசப்புடனே முடிந்தது! தலைவர் போட்டிக்கு தேர்வான சிபி மற்றும் ராஜு சேற்றில் கால்பந்து விளையாடி ஜெயித்தால் வீட்டின் தலைவராகலாம் என அறிவித்த நிலையில் ராஜூவை சிபி தோற்கடித்தாலும் நீர் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை வருண் வைத்துள்ளதால் அதன் சக்தியை பயன்படுத்தி இந்த பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக தன்னை தானே முடி சூட்டிக்கொண்டார்!
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in