விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் ஆஜித்.இந்த நிகழ்ச்சியில் வெற்றியும்பெற்றார்.வெற்றிபெற்ற இவர் பல ஆண்டுகளாக மீண்டும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. சிறுவயதில் சில சில ஆல்பம் சாங் பாடிய இவருக்கு பின்னர் பெரியதாக வாய்ப்பு ஏதும் வரவில்லை.இதனால் மனம் உடைந்த ஆஜித் தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி மக்களிடம் மீண்டும் அறிமுகம் ஆகியுள்ளார்.
இவரை போல விஜய் டிவி மூலம் அறிமுகம் ஆகியவர் தான் கேபி.ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு உருவாகியது.நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடினர்.பின்னர் இருவரும் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தனர்.இதன்மூலம் ஆஜித்தும் கேபியும் காதலிப்பதாக தகவல் பரவியது.இதுகுறித்து அண்மையில் ஆஜித் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,எனக்கும் கேபிக்கும் இடையே காதல் இல்லை நாங்கள் அண்ணன் தங்கை போல தான் பழகுகிறோம் என கூறியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in