நிரூப்புடன் கல்யாணமா ?.. யாஷிகா சொன்ன அதிர்ச்சி பதில் | Yashika Anand | Niroop | Abirami

அந்த காலத்தில் கவர்ச்சியான நடிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிலுக்கு சுமிதா தான். ஆனால் இன்றைய சினிமாவில் கிளாமராக நடிக்கும் பல நடிகைகள் இருந்தாலும் கிளாமருக்கென்றே பெயர்போன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் தன் முதல் படத்திலேயே 18 பிளஸ் ரசிகர்களை சுண்டி இழுத்தார். இவரது கிளாமரான ஆடை அணிந்த 18 பிளஸ் காமெடி இளைஞர்களை கவர்ந்தது.

நிரூப்புடன் கல்யாணமா ?.. யாஷிகா சொன்ன அதிர்ச்சி பதில் | Yashika Anand | Niroop | Abirami 1

விளம்பரம்

அதற்கு முன்பு யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முரட்டு குத்து படம் போன்ற வெற்றியை அந்த படங்களால் அவருக்கு தரமுடியவில்லை. ஒரே படத்தில் பிரபலம் அடைந்ததால் இவருக்கு பிக் பாசில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கவர்ச்சியான நடிகை மட்டுமே என்ற பெயரை பெற்று இருந்த யாஷிகா ஆனந்த் சிறந்த போட்டியாளர் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்துக்காட்டினார்.

நிரூப்புடன் கல்யாணமா ?.. யாஷிகா சொன்ன அதிர்ச்சி பதில் | Yashika Anand | Niroop | Abirami 2

விளம்பரம்

 

தற்போது யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கும் நிரூப்க்கும் இடையேயான உறவு முறிந்து விட்டதாக அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று லைவ் வந்த யாஷிகா தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதில் நானும் நிரூப்பும் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. நங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இப்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என பதில் அளித்துள்ளார். மேலும் நிரூப்பின் முன்னாள் காதலி அபிராமியுடன் ஒன்றாக இருப்பது பற்றி கேட்ட கேள்விக்கு இரண்டு பேரும் ஒன்றாக இருப்பது பற்றி எங்கு எந்த வித வருத்தமும் இல்லை என தெரிவித்து இருந்தார். Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment