தமிழ் சினிமாவில் இன்றுவரை சாக்லேட் பாயாக வலம் வரும் ஒரே நடிகர் ஜீவா.இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல படங்களில் தனது நடிப்பினால் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.
2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆக்கினார் ஜீவா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.
இப்படத்தினை தொடர்ந்து வெளியாகிய தித்திக்குதே படமும் நல்ல ஹிட் அடித்தது.
இப்படி தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.ஆனால் சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை மட்டும் ஜீவா கொடுத்து வருகிறார்.ஒருகாலத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தற்போது சினிமாவில் சறுக்கலை கண்டு தான் வருகிறார்.
இவருக்கு அடுத்ததாக கோல்மால் படம் வெளியாக உள்ளது.அதன்பின் பா விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.இவர் மீண்டும் நல்ல படத்தினை கொடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் இவருக்கு பெரும் தோல்வியை சந்தித்து கொடுத்தது
இதனால் இவர் தனது அடுத்த பட வேளைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,ரசிகர்கள் ஜீவாவின் திருமண வரவேற்பு புகைப்படங்களை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in