மைக் தூக்கி எறிந்ததற்கு நேரில் மன்னிப்பு கேட்டு ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்த நடிகர் பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

மைக் தூக்கி எறிந்ததற்கு நேரில் மன்னிப்பு கேட்டு ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்த நடிகர் பார்த்திபன் 1

விளம்பரம்

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் இசையமைப்பாளர் AR ரஹ்மான் உடன் நிகழ்ச்சியில் உரையாடி கொண்டிருக்கும் பொழுது மைக் வேலை செய்யாததால் திடீரென கடுப்பாகிய பார்த்திபன் AR ரஹ்மான் முன்பு மைக்கை தூக்கி விட்டெறிந்தார்,அந்தமைக் நடிகர் ரோபோ சங்கர் மீது பட்டுள்ளது.இதற்கு பல முறை நடிகர் பார்த்திபன் மன்னிப்பும் கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

மைக் தூக்கி எறிந்ததற்கு நேரில் மன்னிப்பு கேட்டு ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்த நடிகர் பார்த்திபன் 2

விளம்பரம்

தற்போது இதுகுறித்து நடிகர் ரோபோவை நேரில் சந்தித்து அவரிடம் மன்னிப்பு கோரியும் அவருக்கு முத்தமம் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த பதிவில் அவர் கூறியதாவது,மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி,மைக்கை கேட்ச் பிடிக்க தவறியவர் ரோபோ சங்கர்,மைக்கால் பிடிபட்டவர் ரோபோ சங்கர்.மைக்கால் பிடிபட்டவர் பார்த்திபன் என தெரிவித்துள்ளார்

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment