நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவை 90களில் கலக்கியவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது.1989 ஆம் ஆண்டு என்னை பெத்த ராசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர்.தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் ராஜ்கிரண்.தற்போதும் படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.
வயது காரணமாக ராஜ்கிரண் தற்போது கதாநாயகர்களுக்கு அப்பா,மாமா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராஜ்கிரண் மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அதனால் வீட்டை விட்டு வெளியேற காதலித்தவரை கரம்பிடித்துவிட்டதாகவும் அவரது மகள் கணவர் முனிஸ்ராஜா உடன் சேர்ந்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராஜ்கிரண் கூறியதாவது,எனக்கு ஒரே ஒரு மகன் தான் ,ப்ரியா என்பவர் எனது வளர்ப்பு மகள்,அவரை வளர்ப்பு மகள் என்று இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்தேன்.அவர் டிவி நடிகரை காதலிப்பது தெரிந்து விசாரிக்க தொடங்கினேன்,அதில் அந்த பையன் பணத்துக்காக எதையும் செய்ய கூடியவர் என்பது தெரியவந்தது,அதனால் வேண்டாம் என ப்ரியாவிடம் கூறினேன் அவர் எங்களை மீறி சென்று திருமணம் செய்துகொண்டாள்.அந்த பையன் ப்ரியாவை வைத்து வாழ அவரை கல்யாணம் பண்ணவில்லை என்னை வைத்து படவாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகளை பெற திருமணம் செய்துகொண்டுள்ளார்.இனி அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in