மக்களுடன் மக்களாக மாறுவேடத்தில் வந்து வைகை அணையில் தண்ணீர் செல்வதை ரசித்த நடிகர் சூரி

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மக்களுடன் மக்களாக மாறுவேடத்தில் வந்து வைகை அணையில் தண்ணீர் செல்வதை ரசித்த நடிகர் சூரி 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

மக்களுடன் மக்களாக மாறுவேடத்தில் வந்து வைகை அணையில் தண்ணீர் செல்வதை ரசித்த நடிகர் சூரி 2

விளம்பரம்

தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்கிறது.இதனை மதுரை மக்கள் அனைவரும் வந்து ஆவலாக கண்டு வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் சூரி தொப்பி மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து யாரென்று தெரியாதது போல அங்கு சென்று மக்களுடன் மக்களாக நின்று வைகையில் தண்ணீர் செல்வதை ரசித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment