எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்…விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக சினிமாவினை வலம் வருகிறார்.மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீனா கடினமாக உழைப்பதை பார்த்து உறுதுணையாக இருக்கும் முத்து... சிறகடிக்க ஆசை

எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்...விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு 1

விளம்பரம்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது உடல் நிலை சரியில்லாமல் உள்ளார்.சிங்கம் போல் சினிமாவை வலம் வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மேலும் நடிகர் சங்க தலைவராகவும் முன்னதாக பணியாற்றி நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இவர் நடித்த படங்களை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உள்ளனர்.அண்மையில் சர்க்கரை நோயினால் விஜயகாந்த் கால்களில் உள்ள மூன்று விரல்கள் நீக்கப்பட்டுள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கும்,கட்சியினருக்கும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.விஜயகாந்திற்காக அவரது கட்சியினர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அவர் நலம் பெறவேண்டி செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்...விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு 2

விளம்பரம்

தற்போது விஜயகாந்த அவர்கள் பூரண நலம் பெற வேண்டி நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது,தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்! என பதிவிட்டுள்ள்ளார்.இதில் ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் நலம்பெற வேண்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் பலர் சூரியை பாராட்டியும் வருகின்றனர்.யாருமே விஜயகாந்த் மேல் அக்கறைப்படாத போது நீங்கள் இவ்வாறு பதிவிட்டுருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment