நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.
சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.
சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,
அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது
மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்
இவர் தற்போது உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் உடல்நலம் சரியாக வேண்டி பூஜைகளை செய்து வருகின்றனர்.
தற்போது இவர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்,இந்நிலையில் இன்று நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் அவர் நாற்காலியில் அமர்ந்திருந்த பொழுது அதிலிருந்து சரிந்துள்ளார்.உடனே அருகில் உள்ளவர்கள் அவரை தாங்கி பிடித்துள்ளனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in