திடிரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி…ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

திடிரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி...ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இவர் திரையில் தோன்றி நீண்ட இடைவெளி ஆனதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

திடிரென நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி...ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

56 வயதான விக்ரம் தற்போது உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார்,இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இன்று மாலை படத்தின் டீசர் வெளியாக இருந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.காய்ச்சல் காரணமாகவே நடிகர் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றதாக விக்ரம் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment