நடிகர் JAI-யை காதலித்ததால்தான் சினிமா வாழ்க்கை இழந்தேன்? நடிகை அஞ்சலி அதிரடி பதில்

கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் அஞ்சலி.போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகினார்.கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக தமிழ் சினிமாவில் அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து அங்காடி தெரு படத்தில் நடித்து தமிழ் சினிமாவையே அசத்தினார்.இப்படம் இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் வழங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நடிகர் JAI-யை காதலித்ததால்தான் சினிமா வாழ்க்கை இழந்தேன்? நடிகை அஞ்சலி அதிரடி பதில் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம்,கலகலப்பு,அங்காடி தெரு போன்ற படங்கள் ரசிகர்களிடம் இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது கதைகளை கேட்டு அவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்து வந்தால்தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்

நடிகர் JAI-யை காதலித்ததால்தான் சினிமா வாழ்க்கை இழந்தேன்? நடிகை அஞ்சலி அதிரடி பதில் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது நடித்துள்ள FALL என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.இது நாளை முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.இதற்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் அஞ்சலி,அந்த பேட்டியில் அவரிடம் அஞ்சலியின் சினிமா வாழ்க்கை நடிகர் ஜெய்யை காதலித்ததால் போனதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.அதற்கு பதிலளித்த அஞ்சலி,நான் காதலிக்கிறேன் என எப்பொழுதும் சொன்னது கிடையாது,அவர்களே எனக்கும் காதல் இருப்பதாக எழுதி விடுகின்றனர்.நான் அதை பற்றி பேசியதும் இல்லை பேசப்போவதும் இல்லை என கூறி ஜெய்யை காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment