நீயெல்லாம் ஏன் உயிரோட இருக்குற..ரசிகரின் கேள்விக்கு COOL ஆக பதிலளித்த பாரதிகண்ணம்மா பரீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.கதாநாயகியாக நடிப்பது தான் எளிது வில்லியாக சீரியல்களில் நடிப்பது தான் கஷ்டம் அதனை தனது முதல் நாடகத்திலேயே நடித்து அசத்தி விட்டார்.கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.பரீனா சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

நீயெல்லாம் ஏன் உயிரோட இருக்குற..ரசிகரின் கேள்விக்கு COOL ஆக பதிலளித்த பாரதிகண்ணம்மா பரீனா 1

விளம்பரம்

சின்னத்திரையில் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இன்னும் இவருக்கு மக்கள் வரவேற்பினை வழங்கி தான் வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய ஆண் குழந்தை உள்ளது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.இவர் வெளியிடும் வீடியோவை இவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்குவது இயல்பான ஒன்றாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

நீயெல்லாம் ஏன் உயிரோட இருக்குற..ரசிகரின் கேள்விக்கு COOL ஆக பதிலளித்த பாரதிகண்ணம்மா பரீனா 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.இதில் பல ரசிகர்கள் பல கேள்விகளை கேட்க அதற்கு பதிலளித்துள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் நீ எல்லாம் எதுக்கு பாரதி கண்ணம்மா சீரியல்ல இருக்க போய் சாக வேண்டியதானே என கேட்டுள்ளார்,அதற்கு பரீனா எந்த கோபமும் படாமல் அப்படியா என ஆச்சரியமாக கேட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.தற்போது சில நாட்களாகவே ரசிகர்கள் நடிகைகளிடம் ஆபாசமாக அல்லது இதுபோன்று அநாகரீகமாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்,இருப்பினும் அதனை வெளிப்படையாக நடிகைகளும் போட்டு அதற்கு பதிலும் அளித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment