சிலர் என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்துவிட்டார்கள்…வேதனை தெரிவித்த நடிகை ரோஜா

1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் நடிகை ரோஜா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை படைத்தார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர்.அணைத்து சினிமா உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.இவருக்கு தற்போது வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

சிலர் என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்துவிட்டார்கள்...வேதனை தெரிவித்த நடிகை ரோஜா 1

விளம்பரம்

இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி ரோஜா அரசியலில் களம் இறங்கினார்.அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரில் இருந்து எம் எல் ஏ வேட்பாளர் ஆகி அதில் இருந்து வெற்றிபெற்று எம் எல் ஏ ஆகி தற்போது ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.பல பெண்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் ரோஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

சிலர் என் மகளின் புகைப்படத்தை இப்படி செய்துவிட்டார்கள்...வேதனை தெரிவித்த நடிகை ரோஜா 2

விளம்பரம்

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் , நான் சினிமாவிலும்,அரசியலிலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறேன்.அண்மையில் எனது மகள் புகைப்படத்தினை தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டனர்,இதனை பார்த்த என் மகள் அதிக வேதனை அடைந்தார்,அவருக்கு நான் இதனை கண்டு வருந்தாதே என ஆறுதல் கூறினேன்.சில சமயங்களில் எனது புகைப்படங்களையும் தவறாக சித்தரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வாறு செய்பவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment