நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது – ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் என்றே இவரை சொல்லலாம்,இவர் உள்ளதாக படங்களே கிடையாது,அந்தளவிற்கு ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கிவிட்டனர்.இவர் தமிழில் 1993 ஆம் ஆண்டு உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்

கட்டாயம் படிக்கவும்  இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது

நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து இவர் நடித்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்,இடையில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் உடனடியாக ரவீந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகினார்.இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.குழந்தைகளுடன் லண்டனில் தங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அம்மு அபிராமியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகை ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியது - ரம்பாவின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி 2

விளம்பரம்

இந்நிலையில் ரம்பா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும்பொழுது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,இதில் அனைவரும் சிறிய காயங்களுடன் தப்பியதாகவும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ரசிகர்கள் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment