The Indian Times

நெகட்டிவ் கமெண்ட் கொடுத்தா:போலீசை கூப்பிடுவேன்;யூடியூபில் நெகட்டிவ் கமெண்ட் செய்தவர்களுக்கு விஜய் டிவி நடிகை எச்சரிக்கை

தெலுங்கு சீரியல் நடிகையான சமீரா ஷெரிப் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்ற தொடரின் மூலம் அறிமுகமாகினார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இவர் பிற நடிகர்களை போலவே சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.யூடியூபில் 4 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் வைத்துள்ளார்.தொடர்ந்து இவர் தனது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அண்மையில் பிறந்த தனது குழந்தையுடன் எடுத்த வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வருகிறார்.இவரது வீடியோவிற்கு அதிகமாக இவர்களை திட்டி தீர்த்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனால் கடுப்பாகிய நடிகை சமீரா ஷெரிப்,தனக்கு வந்த நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பதிலளித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.அதில் நெகட்டிவ் கமெண்ட் அளித்த பலருக்கும் பதில் அளித்துள்ளார்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கில் இருந்தும் சிலர் அவருக்கு கேள்வி எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பேசிய அவர்,உங்களது நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பதில் அளிக்கும் அளவிற்கு நீங்கள் தகுதியானவர்கள் இல்லை,இருப்பினும் எங்கள் வீட்டில் உள்ள நபர்களை நீங்கள் தவறாக பேசி வருவதை கண்டிக்காமல் இருக்க முடியாது.இனி யாராவது நெகட்டிவ் கமெண்ட் செய்தால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டறிவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.முழு தகவலுக்காக வீடியோ கீழே

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in