குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகம் ஆகியவர் நடிகை சரண்யா மோகன்.இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் படிப்படியாக வளர்ந்து துணை நடிகையாக மாறினார்.யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.அதை தொடர்ந்து ஜெயம்கொண்டான் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை தேடி வந்த சரண்யாவிற்கு,சுசீந்திரனின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்படி சரண்யா நடிப்பில் வெளியாகிய படம் தான் வெண்ணிலா கபடி குழு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் வர தொடங்கியது.இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.நடிகர் விஜய்க்கு தங்கையாக வேலாயுதம் படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முழுவதும் விலகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.மேலும் பரதநாட்டிய கலைஞர் ஆன இவர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவார்.இந்த வீடியோக்கள் இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் மலையாள பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in