தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா.
இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார் சீதா.
1990களில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை சீதா.தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக்கொண்டு வந்தார் சீதா.
இவருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு இடையே படம் நடிப்பின் பொழுது காதல் மலர்ந்தது,இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.மேலும் இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் புரிந்துகொண்டனர்.
தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சீதா தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இதன் மூலம் அவர் தனக்கு தேவையான காய்கறிகளை அவரே அறுவடை செய்து சாப்பிடுகிறார் சீதா,இதனை புகைப்படங்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in