The Indian Times

எங்க காதல் எப்போவும் குறையாது… கணவருடன் செம்ம ROMANTIC ஆக புகைப்படம் எடுத்த நடிகை சினேகா

மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

Advertisement

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

Advertisement

தற்போது இவர் அடிக்கடி புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பட்டுசேலையில் கணவருடன் செம்ம ரொமேன்டிக் ஆக புகைப்படம் எடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்பொழுதும் கூட நீங்க அப்படியே இருவரும் செம்ம கியூட்டாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in