தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதிவ்யா.வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.முதல்படமே இவருக்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் .ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி ஆகிய படங்கள் இவருக்கு பலத்த வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.
கவர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காத ஸ்ரீதிவ்யாவிற்கு ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் இறுதியாக நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சங்கிலி புங்கிலி கதவை தொரை என்ற படத்தில் நடித்தார்.அதன்பின் 5 ஆண்டுகளாக இவர் சினிமா பக்கம் எட்டி பார்க்கவில்லை என்ன காரணம் என்பது தெரியவில்லை.முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த ஸ்ரீதிவ்யா காணாமல் போனது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
மீண்டும் இவர் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஜனகனமன என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ்,தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யாவை ரசிகர்கள் திரையில் பார்ப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் அவர் புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.ஆரம்பத்தில் சின்ன பெண் போன்று இருந்த இவர் தற்போது அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in