விஜய் தொலைக்காட்சியில் 7சி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகியவர் ஸ்ரீ நிதி.அதனை தொடர்ந்து தற்போது சில நாடகங்களில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அந்த பதிவில் அவர் கூறியதாவது என் வாழ்க்கையில் எதுவுமே ஈஸியா கிடைக்காது போலெ,என் மொத்த வாழ்க்கையும் அப்படிதான் இருக்கும் போல .உண்மையா சொல்லனும்னா நான் வாழ்க்கை ஓட விரக்தில இருக்கேன் ,யாரையாவது பார்த்தா கண்டிப்பா கொலை கூட பண்ணிடுவேன் ஆனா இப்போதைக்கு எனக்கு அழுக்குறத தவிர வேற ஒன்னும் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே இவர் தான் மன உளைச்சலில் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்,அதனை தொடர்ந்து இவர் பதிவிட்டு வரும் அனைத்து பதிவுகளும் சர்ச்சையை மட்டும் தான் கிளப்பி வருகிறது.அண்மையில் டாஸ்மாக்கில் இவர் மது வாங்கிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.இது பெரும் விமர்சனம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது இந்த பதிவும் வைரலாகி வருகிறது
video courtesy: behindwoods
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in